Archive for செப்டம்பர் 13th, 2006
பாட்டிற்காகவே மாண்ட நந்தி
மயானத்தில் சிதை அடுக்கி அதன்மீது அமர்ந்து நந்தி கேட்க வேண்டும் என்ற விதியின்படி மயானத்தில் அமைந்த சிதையின் மீதிருந்து நந்தி கேட்டு ரசித்தான். நூறு பாடல்களை ஒவ்வொன்றாகப் பாடும் போது, ஒவ்வொரு பந்தர் பற்றி எரிந்தது. நூறாம் பாடலை பாடும்போது, மயாத்துப் பந்தரும் பற்றி எரிந்தது. நந்திவர்மன் உயிர் துறந்தான் என்பது வரலாறு.
இந்தக் கலம்பகத்தைக் கேட்பதற்காகவே நந்திவர்மன் உயிர் துறந்தானாம். இந்தக் கதை நிகழ்ச்சியுடன் தொடர்புடைய பால் இது.
‘வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
கையகம் அடைந்ததுன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
தேனுரு மலராள் அரியிடம் சேர்ந்தாள்
செந்தழல் புகுந்ததுன் மேனி
யானும் என்கலியும் எவ்விடம் புகுவோம்?
எந்தையே நந்தி நாயகனே’!
என்னார்
2 comments செப்டம்பர் 13, 2006